சுரைக்காய் நீர்ச்சத்து மிகுந்தது. இதில் வைட்டமின் பி2, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து, புரதம் ஆகியவை உள்ளன.
சுரைக்காயை சமைத்து உண்ண உடல் வீக்கம் குறையும். சிறுநீர் அதிகமாக இறங்கும். இதை கர்ப்பிணிப் பெண்கள் பாத வீக்கம் குறைய சமைத்து உண்ணலாம்.
சுரைக்காய், துளசி, ஆடாதோடை ஆகியவற்றை ஒன்றிரண்டாக நறுக்கி, அவற்றுடன் சுக்கு, திப்பிலி, பற்படாகம், கோரைக் கிழங்கு சேர்த்து கஷாயமிட்டு குடித்து வர குளிர் காய்ச்சல் குணமாகும்.
சுரைக்கொடியை பூண்டுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தாலோ அல்லது கொடியை நீர்விட்டுக் காய்ச்சி கஷாயமாக்கிக் குடித்து வந்தாலோ, உடலில் தங்கிய நீரை வெளியாக்கி, உடல் வீக்கத்தை குறைக்கும்.
சுரைக்கொடி இலையை ஒன்றிரண்டாக நறுக்கி நீர்விட்டுக் காய்ச்சி சர்க்கரை சேர்த்து குடித்து வர காமாலை குணமாகும்.
0 comments:
Post a Comment